Friday, August 7, 2009

இதயத்தை எப்படி எல்லாம் கசக்கி பிழியப் போகிறார்களோ

இதயம். புத்தம்புதிய மெகா தொடர். சன் டிவியில் காணத் தவறாதீர்கள்

நான் டாக்டர் சாய் கல்யாணி. தினம் கேட்கும் குழந்தை அழுகைதான் எனக்கு சங்கீதம்.

தாலிக்கொடி மூலம் எனக்கு ஒரு தாய் கிடைப்பாள் என்று நான் நினைக்கலை

ஒரு நல்ல மனைவி கிடைத்தால் அவன் தான் பணக்காரன்.

ஏன் ஆண்களுக்கு மட்டும் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. அவர்கள் நிறைய ரகசியங்களை நெஞ்சில் பதித்துக் கொள்வதால்

என் மருமகள் மகளாக இருக்கணும். ஏன்னா நான் தாயா இருப்பேன்.

இப்படி பல முன்னூட்டங்களுடன் விரைவில் வர இருக்கிறது,


இதயம்.


புதிய சீரியல். சீதா மற்றும் பலர் நடித்தது.

7 comments:

bandhu said...

ஐயோ பாவம். எப்படியெல்லாம் பழி வாங்குவது? எப்படியெல்லாம் சதி செய்வது? எந்த மாதிரியெல்லாம் வன்முறைகள் செய்வது என்றெல்லாம் சொல்லி கொடுக்க
போகிறார்கள்.

நல்லவேளை எச்சரித்தீர்கள். நன்றி

goma said...

நான் இப்போழுதே சபதம் எடுத்துவிட்டேன்.இதயத்தில் விழாமல் நம் இதயத்தைக் காப்பாற்றிக் கொள்வதாக.

யாரெல்லாம் சேருகிறீர்கள் இந்த,’சீரியலில் சிக்காத சின்ன இதயங்கள் சங்கத்தில்’

goma said...

நான் டாக்டர் சாய் கல்யாணி. தினம் கேட்கும் குழந்தை அழுகைதான் எனக்கு சங்கீதம்

அப்படின்னா பக்கவாத்தியம்???????
---
தாலிக்கொடி மூலம் எனக்கு ஒரு தாய் கிடைப்பாள் என்று நான் நினைக்கலை

அப்படீன்னா தாலிக் கொடியில் தாலியே காய்க்காதா???

ஒரு நல்ல மனைவி கிடைத்தால் அவன் தான் பணக்காரன்.

அப்போ பில்கேட்ஸ்??????
---------
ஏன் ஆண்களுக்கு மட்டும் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. அவர்கள் நிறைய ரகசியங்களை நெஞ்சில் பதித்துக் கொள்வதால்

வெளியே விடும் வேலையைத்தான் மனைவி பார்த்துக் கொள்கிறாரே
----
என் மருமகள் மகளாக இருக்கணும். ஏன்னா நான் தாயா இருப்பேன்.

‘சீரியல் தொடங்கி 10 எப்பிசோடுக்குப் பின்னாலேதானே தெரியும் யார் பிசாசா இருப்பா யார் பேயா மாறுவான்னு’

ராமலக்ஷ்மி said...

எல்லா சீரியலும் ஒரே போலத்தான். பார்க்காமல் இருந்திட்டால் நம்ம இதயம் நல்லாயிருக்கும்:)!

ராமலக்ஷ்மி said...

'இதயம்' சீரியல் இருக்கட்டும் ஒருபக்கம்!

இப்போது என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்:)!

MANY MORE HAPPY RETURNS OF THE DAY!

goma said...

இப்போது என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்:)!

இது எப்போ ????சொல்லவே இல்லையே...!!!!!!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

nila said...

adutha kodumai.... penkalai muttaalaakkum yuthi