Monday, November 25, 2013

செந்தமிழ் தேன்மொழியாள்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் தவறாமல் பார்க்கிறேன். குழந்தைகள் எல்லொரும் ரொம்ப அழகாக பாடுகிறார்கள்.. 

இன்று உன்னி கிருஷ்ணன் டீமில் வந்த சோனியா, சர்த் சந்தோஷ், சாயி விக்னேஷ் மூவருமே தாங்கள் தேர்வு செய்த பாட்டை அழகாக பாடினார்கள்.

"வான் நிலா" பாட்டில் வயலின் வாசித்தவரை, சிறப்பு விருந்தினர் வயலினிஸ்ட் சீனிவாசன் பாராட்டி 1978ல் தான் சென்னை வந்த புதிதில் எஸ்.பி.பாலசுப்ரமணியனுடன் ஒரு மேடைக் கச்சேரில் அந்த் பாட்டுக்கு தான் வயலின் வாசித்ததை சொன்னார்."

"செந்தமிழ் தேன்மொழியாள்" என்று சாயி விக்னேஷ் பாடியதும் , சீனிவாசன் பாராட்டி, படத்தில் பாடியது திருச்சி லோகநாதன் தானே என்று கேட்க விக்னேஷ் ஆமாம் என்று சொன்னான். அனந்த் சார் உடனே அது மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடியது என்று சொல்வார் என்று பார்த்தேன். இல்லையே.

ஆர்கெஸ்ட்ராவில் எல்லோருமே அழகாக வாசிக்கிறார்கள். புல்லாங்குழல், வயலின், தபேலா வாசிப்பை முக்கியமான இடங்களில் கேமரா காட்டுவது ரொம்ப அழகு

No comments: