Monday, January 13, 2014

சாலை பாதுகாப்பு வாரம் - மாணவர் பேரணி.

 

பொங்கல் விடுமுறை வருவதால், வட்டார போக்குவரத்து அதிகாரி கேட்டுக்கொண்டபடி, 17ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாணவ/மாணவிகள் பேரணி நடத்த திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் திட்டமிட்டோம்.
தலைமைச் செயலகத்திலிருந்து 13ந்தேதி திங்களன்று மாநில அளவில் எல்லா மாவட்டத்திலும் பேரணி நடத்த வேண்டும் என்று வந்த உத்தரவால், போக்குவரத்து ஆய்வாளர்கள் கேட்டதும் எங்கள் சங்க செயலாளர் எம். செல்லையா விரைந்து செய்த ஏற்பாட்டினால் பள்ளி மாணவர்கள் திரண்டனர். சங்கரன்கோவில், அம்பாசமுத்திரத்திலிருந்தும் பிள்ளைகள்.வந்தனர்.


பாளை வ.உ.சி மைதானத்தில் அணிவகுத்த பேரணி, மாவட்ட ஆட்சியாளர் கருணாகரன் பகல் 3.00 மணிக்கு கொடி அசைக்க,




குலவணிகர்புரம் லெவல் க்ராஸ் வரை ஊர்வலம் சென்றது. சங்கத்திலிருந்து கொண்டு சென்ற பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் பிள்ளைகளுக்கு கொடுத்து, பின் அவர்களை சங்க பொருளாளர் கே.ஜி.கிருஷ்ணன்(SGKR),
-ஸ்ரீதர்(KVS) தங்கள் சிடி பஸ்ஸில் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

                                     

தன்னார்வத் தொண்டர்களுக்கு சங்கம் சார்பில் டீ ஷர்ட் வழங்கினோம்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:
திருநெல்வேலியில் இன்று பதவி வகுத்த வட்டார போக்குவரத்து அதிகாரி தங்கவேல், மாற்றலாகி செல்லும் முத்துசாமி, ராஜசேகர்(தென்காசி), மகாதேவன்(சங்கரன்கோவில்)
காவல்துறை டெபுடி கமிஷனர் தாம்ஸன், போக்குவரத்து ஆய்வாளர்கள் - செந்தில்குமார், இளமுருகன், சசி மேடம், விநாயகம்(வள்ளியூர்),
ராம்குமார்(அம்பை)

                                     

பஸ் உரிமையாளர்கள் -எஸ்.வடிவேல்முருகன்(தலைவர்),
மு.செல்லையா(செயலாளர்),   கபீர்(உபதலைவர்), கே.ஜி.கிருஷ்ணன்(பொருளாளர்)  ஸ்ரீதர்,  நாராயணம்குமார், வாலைமுருகன்,

ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வக்கீல் பிரபாகரன் ஆகியோருடன் பலர் வந்திருந்தார்கள்.



  

No comments: