Monday, January 27, 2014

OLD BOYS !!!



தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர் மன்ற குடும்ப விழா- 2014 வழக்கம் போல குடியரசு தினத்தன்று மாலை 5.00 மணிக்கு, கல்லூரியின் நூலக முற்றத்தில் நடந்தது.
மன்றத்தின் தலைவர் திரு.அழகியநம்பி தலைமையில், கல்லூரி முதல்வர் Rev.கில்பர்ட் கமில்லஸ், இயக்குனர் Rev.Dr.ஆரோக்கியசாமி, செயலர்.Rev.ஜேஸு மைக்கேல்தாஸ் ஆகியோரின் முன்னிலையில், மன்றத்தின் செயலர் திரு.ஜி.முத்துகிருஷ்ணன் அவையோரை வரவேற்க விழா தொடங்கியது.






சிறப்பு விருந்தினர்களாக, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி தாளாளர்
 திரு.A. P. C V.சொக்கலிங்கமும்
 பாளை தூய யோவான் கல்லூரி தாளாளர் திரு.குணசிங் செல்லதுரையும் வந்தார்கள்.
திரு.சொக்கலிங்கம் தன் உரையில், தான் தூத்துக்குடி கால்ட்வெல் பள்ளியில் படித்த காலம் தொடங்கி, கால்ட்வெல் கிறிஸ்துவ மதப் பிரசாரத்திற்காக இந்தியா வந்தவர், தமிழை கற்றுக் கொண்டதையும், கல்விக்காக பள்ளிகள் நிறுவியதையும் விவரித்தார். முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் வந்து, கல்லூரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் கண்டு மகிழ்ந்து. மனைவி,குழந்தைகளிடம் இதுதான் என் க்ளாஸ் ரூம் என்று காட்டி மகிழ்ந்தீர்கள் என்றார். கல்லூரி நடத்துவதில் இப்போது உள்ள சிரமங்கள் என்னென்றும், நம் கல்லூரிகள்தான் கல்வியை வியாபாரம் ஆக்காமல் ஒரு சேவையாக நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார்.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்களை, முன்னாள் மாணவர் திரு.பா.வளன் அரசு பாராட்ட, முன்னாள் மாணவர், நீதியரசர் ஐ.டேவிட் கிறிஸ்டியன் வாழ்த்திப் பேசினார்.



முன்னதாக நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு தந்தார்கள்.

நான் சந்தித்த, Old Boys - பாண்டியன் கிராம பேங்க் ஸ்தாபக டைரக்டர், திரு.கள்ளபிரான், குணசிங், ஸ்டேட் பேங்க்-ஓய்வு பெற்ற ஜோஷுவா, Dr.மஹாகிருஷ்ணன், மகராஜன் ஆறுமுகம், ஆடிட்டர் சாமுவேல், எல்.ஐ.சி பி.மணி. என் 1962 பாட்ச் யாரும் பார்க்க முடியவில்லை.  முகநூலில் பார்த்து தொடர்பு கொண்டால் சந்தோஷம்.

Rev.டேனியல் பொன்னையா சங்கத்தின் ஆண்டு மலரை வெளியிட்டார். 
நிகழ்ச்சியை Dr.S.V.L. மைக்கேல் தொகுத்து வழங்கினார். மன்ற செயலாளர்திரு.எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்

1 comment:

Unknown said...

VISIT

JOTHIDA EXPRESS

WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN