Thursday, May 8, 2014

உயிரை காப்பாற்றிய லயன் பஸ்

புதன்கிழமை காலை என் அண்ணி ஆஸ்பத்திரியில் இருக்கிறார்ன்னு தெரிந்ததும் பார்க்கப் போனேன். "ஒன்றுமில்லை சித்தப்பா, அம்மா சுவாசிக்க சிரமப்பட்டதால் வந்தோம் என்றான் ரமணி. எங்களை யார் என்று விசாரித்த டாக்டர் பாலாஜியிடம் லயன் கம்பெனி என்றதும், ற்ட்ன்.வடிவேல்முருகன் உங்களுக்கு என்ன வேன்டும் என்று கேட்டார். திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில் படிக்கும் போது உங்கள்  க்விஸ் நிகழ்ச்சி பற்றி சொன்னார். இப்போ டாக்டர் வருவார், என்ன சொல்கிறார் பாருங்கள் என்றான்,

 சிறிது நேரத்தில் வந்த டாக்டர் பாலாஜி, என்னைப் பார்த்ததுமே சார் வாங்க,

"என் உயிரை காப்பாற்றியதே லயன் பஸ்தான் " என்றார்.
 
அவரது சொந்த ஊர் எட்டயபுரம். 1974ல், தான் சின்னக்குழந்தையாக (1 1/2 வயது) இருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் திடீரென்று உடல் சரியில்லாமல் போனதால் கோவில்பட்டி ஹாஸ்பிடல் போக வேறு வண்டி எதுவும் கிடைக்காமல் பஸ் ஸ்டாண்டில் ஹால்ட் ஆகி நின்ற எங்கள் லயன் பஸ் டிரைவரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆபீஸ் அனுமதியில்லாமல் என்ன செய்ய என்று யோசித்த டிரைவர் சமயோசிதமாக அருகில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திருநெல்வேலி ஆபீஸுக்கு ட்ரங்க் காலில் கேட்டு அனுமதி வாங்கினாராம் - டிரைவரும் ட்யூட்டியில் இருந்த போலீஸ்காரர்களும் பாராட்டுக்குரியவர்கள் -

உடனே பேற்றோருடன் குழந்தை பாலாஜியை கோவில்பட்டி கொண்டு சேர்த்துவிட்டு எட்டயபுரம் திரும்பினார்.

 முதலுதவிக்குப் பிறகு மறுநாள் காலை பாலாஜியை மதுரை ஹாஸ்பிடல் கூட்டிப் போனார்களாம்.

அந்த பஸ்ஸை போட்டோ எடுத்து இன்றும் தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்களாம்

No comments: